Posts

கேட்டுக் கொண்டே இருக்கிறது

தூரத்தில் கேட்டுக் கொண்டே இருக்கிறது மனமோ, நினைவுகளில் ஓடும் கனவுகளின் எச்சமோ... தொலைந்த நினைவுகளோ? அல்லது காத்திருந்து துடிக்கும் எண்ணங்களோ? இதில் தான் காலம் கழிகிறது, அந்தச் சத்தத்தைக் கேட்டுக்கொண்டே... சாத்தியங்கள் இசையாக மாறும் தருணத்தை எதிர்பார்த்து!

மீண்டும் தொலைந்து

தொலைந்து போவதே ஒரு வழக்கம் அன்பில், அழகில் ஒழுக்கத்தில், சேவையில், வேலையில் தொலைந்து கொண்டே இருக்கிறோம். மீட்பவரின் கை நீண்டிருந்தாலும்,  அந்தப் பிடிக்குள்ளேயே தொலைந்து போகவே விரும்புகிறோம். நினைவிலிருந்து அகலும் கணமே, முன்னால் வந்து "நான் தொலைகிறேன்" என்று அறிவித்துவிட்டு, மறுபடியும் தொலைந்து விடுகிறோம். மற்றவர்களின் நினைவிலிருந்து  மறைந்து விடக் கூடாது என்பதற்காகவே, இப்படித் தொடர்ந்து  தொலைத்துக் கொள்கிறோம்.
உலகளந்தவனின் பெருங்கைகளை கால்களையும் போல் அவன் மனமும் பெரிதாக இருக்குமோ.  அவனின் தலையில் இருந்தும் தோள்களிலிருந்தும் கால்களிலிருந்தும் தொடையில் இருந்தும் பிறந்தார்கள். அவன் மனதில் இருந்து பிறந்தவர் யார்

இருப்பின் பதட்டம்

ஒவ்வொரு இறப்பும் நினைவூட்டிச் செல்கிறது - யாராலும் வெல்ல முடியாத காலத்தை முற்றுப் பெறாத உரையாடல்கள், மூழ்கிப் போன மௌனங்கள், தொடர்ந்து கொண்டிருந்த சண்டைகள், சொல்லி முடிக்காத நன்றிகள் என - நினைவுபடுத்துகிறது ஓர் இறப்பு! இன்னொரு இறப்பு வருவதற்குள் சொல்லிவிட வேண்டும்... பேசிவிட வேண்டும்... அணைத்துக் கொள்ள வேண்டும்... "இனி நேரமில்லை" எனும் உறுதி - மறுபடியும் மற்றொரு இறப்பில்தான்  ஞாபகம் வருகிறது!

மானம் பெரிது.கோழையாய் வாழ்வதை விட பெரிது;உயிரைச் விட்டிடலாம்."போரை நிறுத்து, உயிரைக் காப்பாற்று" எனச்சொல்பவர்கள் சொல்லிக்கொண்டே இருக்கட்டும்.சிரிப்பவர்கள் இருக்கும்வரைகோவணத்தைக் கழற்றி முகத்தை மூடி கொள்ள முடியாது!"புறம் காட்டா வீரத்தில்,கொல்வதிலிருந்தும் சாவதிலிருந்தும் எவராலும் மீள முடியாது.வாழ்வைப் போற்றத் தெரியாத வரை,கோழைகள் துப்பாக்கியோடு "வீர மரணத்தை" முத்தமிட்டுகொண்டேதான் இருப்பார்கள்!

மானம் பெரிது. கோழையாய் வாழ்வதை விட பெரிது; உயிரைச் விட்டிடலாம். "போரை நிறுத்து, உயிரைக் காப்பாற்று" எனச் சொல்பவர்கள் சொல்லிக்கொண்டே இருக்கட்டும். சிரிப்பவர்கள் இருக்கும்வரை கோவணத்தைக் கழற்றி முகத்தை மூடி கொள்ள முடியாது! "புறம் காட்டா வீரத்தில், கொல்வதிலிருந்தும் சாவதிலிருந்தும் எவராலும் மீள முடியாது. வாழ்வைப் போற்றத் தெரியாத வரை, கோழைகள் துப்பாக்கியோடு "வீர மரணத்தை" முத்தமிட்டு கொண்டேதான் இருப்பார்கள்!. கோழையாய் வாழ்வதை விட பெரிது; உயிரைச்  விட்டிடலாம். "போரை நிறுத்து, உயிரைக் காப்பாற்று" எனச் சொல்பவர்கள் சொல்லிக்கொண்டே இருக்கட்டும். சிரிப்பவர்கள் இருக்கும்வரை கோவணத்தைக் கழற்றி முகத்தை மூடி கொள்ள முடியாது! "புறம் காட்டா வீரத்தில், கொல்வதிலிருந்தும் சாவதிலிருந்தும் எவராலும் மீள முடியாது. வாழ்வைப் போற்றத் தெரியாத வரை, கோழைகள் துப்பாக்கியோடு "வீர மரணத்தை" முத்தமிட்டு கொண்டேதான் இருப்பார்கள்!

Reflection: On Death and Dependency

The Lessons of Loss Irvin Yalom suggested that we deal with the fear of death by ignoring it or by trying to find meaning through work. Recently, I’ve had to stop ignoring it. Losing friends every year brings a different kind of closure each time, and it has made me weigh my own life differently. I think of three friends in particular:  * One saw death as a celebration, a way to end the cycle of *karma*. Ironically, this maharder to save the lives of thousands of children.  * Another died suddenly while running—an active life, deeply concerned with the world, even while struggling with depression.  * A third had a gift for making every person feel like they were his best friend. It was pleasurethat wights heavy to read the obituaries. It is not of greatness, it is gentleness and care that stoodout  All three had one thing in common: their relationships were personal and filled with deep affection. The Fear of Dependency I used to wish for a death so silent that no on...

நீட்டிய நட்பு

மனம் கீழ்மையை விசையற்ற பந்து போலச் சரிந்து, வழிந்து, தேங்கிவிடுகிறது. என்னைவிட சிறந்த நண்பர்கள், உறவினர்கள், துணை உனக்கு இருக்கும்போது மனம் விலகிச் செல்கிறது. மௌனமும் செயலும் சொல்லப்படாத அக்கறைதான் என்று எப்படிப் புரியவைப்பது? யாருக்குப் புரியவைப்பது? மனம் கீழ்மையைத் விசையற்ற பந்து போலச் சரிந்து, வழிந்து, தேங்கிவிடுகிறது.